ssddகிளிநொச்சி, இரணைமடு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மரங்களை வெட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த ட்ரெக்டர் மற்றும் மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மேலும் சில உபகரணங்களும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக ஒலுமடு வனக் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.