accident (3)மட்டக்களப்பு ஏறாவூர் களுவன்கேணி, கோறளங்கேணியில், முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், களுவன்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் சுஜித் (வயது 22) என்பவரே, தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, உயிரிழந்துள்ளார். அதிகூடிய வேகத்தில் பயணித்த குறித்த முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வாய்க்கால் ஒன்றுக்குள் குடைசாய்ந்ததிலையே, இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.