swordயாழ். சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு இளைஞர்கள்மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 7.30அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் மட்டுவில் வடக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் வீதியோரம் கதைத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள்மீது சரமாரியாக வாள்வெட்டினை நடாத்தியதோடு, அங்கு நின்ற ஆட்டோவையும் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். அப்பகுதியில் நின்றவர்கள் காயமடைந்தவர்களை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். பின்னர் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மட்டுவில் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த பெ.பாலகுhமர் (வயது 22), ம.ஜனார்த்தனன்(வயது 24) ஆகியோர் கழுத்து மற்றும் கைப் பகுதிகளில் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.