fishermen talksஇந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை, கொழும்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்திய அரசாங்கம் சார்பில், அந்நாட்டின் மீன்பிடித்துறை அமைச்சர் ராதா மொஹான் சிங் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, இலங்கைகைய பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கலந்துரையாடலுக்கு முன்னதாக, வட மாகாண மீனவர்களுடன், அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.