swordசாவகச்சேரி அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென காயமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலை அண்டிய பகுதி சாலையில் கதைத்துக் கொண்டிருந்த மூவர்மீது வாள்வெட்டு இடம்பெற்று இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.