DSC06660முல்லைத்தீவு கருவேலன்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அபிவிருத்திக்கு முன்னோடியானவரையும், பாடசாலையில் விசேட திறமைகளைப் பெற்றிருந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.04.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி யோ.துரைரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.ஜெயபாலன், கோட்டக்கல்வி அதிகாரி க.பங்கஜசெல்வன், கிராம சேவையாளர் திருமதி நீரூஜா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தீபா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது விசேட திறமைகளைப் பெற்றிருந்த மாணவர்களும், சிறந்த சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

DSC06639 (1) DSC06652 DSC06657 DSC06686 DSC06689 DSC06690