sவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், நியாயமான சுய உரிமையான அரச நியமனங்களை கேட்டு நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 38 ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது.

இதனை வலியுறுத்திய கவனயீர்ப்பு நடைபயணம் ஒன்று இன்றையதினம் யாழ் பல்கலைகழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் பலாலி வீதி, ஸரான்லி வீதியூடாக மத்திய பேரூந்து நிலையம் வரை சென்று அங்கு இருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதியுடாக யாழ் மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர். இதன்போது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதில் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் சமூகத்தினை சேர்ந்த மூவின பட்டதாரிகளும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.