யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் திருமதி பவுந்திகா அல்பிரட் (முன்பள்ளி முகாமைத்துவக் குழு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ந.திருவாசகன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி), திரு. ரி.ஜெயந்தன் (தாதிய உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு,
கௌரவ விருந்தினர்களாக திரு. க.இளஞ்கோவன் (அதிபர் யா-கரம்பைக்குறிச்சி அ.த.க பாடசாலை), திரு. ப.கதிர்காமசோதிலிங்கம் (உப அதிபர் யா-ஸ்ரீபாரதி வித்தியாலயம்), திரு. சி.கந்தசாமி (அதிபர் ஓய்வுநிலை), திரு. ஆ.சாந்தகுமார் (தலைவர், ப.தே.வ.அ.கூ.சங்கம்,), திரு.ந.இராஜலிங்கம் (கிராம அலுவலர்), திரு. பா.கோகுலன்(சமுர்த்தி உத்தியோகத்தர்), செல்வி வ.தயாழினி( பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. ஜெ.ஜெயபவன் (தலைவர், பழைய மாணவர் சங்கம்), திரு. கி.தங்கேஸ்வரன் (ஆசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று இறுதியில் பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.