Header image alt text

anpuh chirar ellam02கனடா நாட்டை சேர்ந்த சர்வேஸ்வரன் அனுசியா அவர்களால் தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்பு சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளை, இன்று வட்டுக்கோட்டை  இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

Read more

DPLF Help01adsdsபுலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் மன்னார் பட்டித்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தோம் முதியோர் இல்லத்திற்கு 18,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது .
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ் கிளைத் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஆதரவு இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

uma school 05வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கட்டடத் திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம், கே.தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயம்), எஸ்.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு வலயம்), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் (தலைவர், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்), எஸ்.அருள்வேல்நாயகி (முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்), வி.யோகநாதன் (கிராம சேவையாளர்), இலங்கேஸ்வரன் (பொலிஸ் அதிகாரி), ஐ.விக்னபவானந்தன் (ஜே.பி –செயலாளர் சிவன் கோயில்)ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more