anpuh chirar ellam02கனடா நாட்டை சேர்ந்த சர்வேஸ்வரன் அனுசியா அவர்களால் தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்பு சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கு எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு புத்தாடைகளை, இன்று வட்டுக்கோட்டை  இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

தமது பிள்ளளைகளை போன்று இச் சிறார்களும் புத்தாடை அணிந்து தமிழ் சித்திரை புத்தாண்டை மன மகிழ்வோடு கொண்டாடுவதற்க்கு இக் கைங்கரிய செயலை செய்ய முன்வந்துள்ள ச.அனுசா அவர்களுக்கு நன்றிகளை கூறி கொள்ளும் தருணம் இவரது பெற்றோர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இல்ல சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாவும் இறைவனை பிராத்திக்கின்றோம்.

anpuh chirar ellam01anpuh chirar ellam02anpuh chirar ellam03