புலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் மன்னார் பட்டித்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தோம் முதியோர் இல்லத்திற்கு 18,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது .
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ் கிளைத் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஆதரவு இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நிதியுதவி சந்தோம் முதியோர் இல்ல நிர்வாகியிடம் (07.04.2017) வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
இவ் உதவியினை (புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் (மன்னார் மாவட்டம்) திரு. இரா.அந்தோனிப்பிள்ளை (தோழர் கொன்சால்) அவர்கள் கட்சி சார்பாக வழங்கினார்.