Header image alt text

palamவவுனியா சமனங்குளம் பகுதியில் மழைகாலங்களில் வெள்ளத்தினால் பெரும் இன்னல்களை அப்பகுதி மக்கள் எதிர் நோக்கி வந்தனர். இது தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.      இந்நிலையில் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் நிலமையை விளக்கி வேண்டுகோள் விடுத்ததன் பேரில் வட மாகாண மீன்பிடி வீதி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களின் உத்தரவின் பெயரில் கோவில்குளம் சமனங்குளம் வீதியில் அமைந்துள்ள சமனங்குளம் பாலத்துக்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை நேரில் சென்று திரு.லிங்கநாதன் அவர்கள் பார்வையிட்டார்.

malalaநோபல் பரிசை வென்றுள்ள மலாலா யூசஃப்சாய், மிக இளம் வயதில் ஐ.நாவின் அமைத்திக்கான தூதுவராகியுள்ளார்.தற்போது பிரிட்டனில் ‘ஏ’ லெவல் வகுப்புகளில் இருக்கும் 19 வயதாகும் மலாலாவிற்கு, புகழ்பெற்ற பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது; பெண் கல்வியில் சிறப்பு கவனத்தை செலுத்தும் வகையில் மலாலா அந்த வாய்ப்பை ஏற்கவுள்ளார். Read more