palamவவுனியா சமனங்குளம் பகுதியில் மழைகாலங்களில் வெள்ளத்தினால் பெரும் இன்னல்களை அப்பகுதி மக்கள் எதிர் நோக்கி வந்தனர். இது தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.      இந்நிலையில் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் நிலமையை விளக்கி வேண்டுகோள் விடுத்ததன் பேரில் வட மாகாண மீன்பிடி வீதி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களின் உத்தரவின் பெயரில் கோவில்குளம் சமனங்குளம் வீதியில் அமைந்துள்ள சமனங்குளம் பாலத்துக்கான ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை நேரில் சென்று திரு.லிங்கநாதன் அவர்கள் பார்வையிட்டார்.