கந்தரோடை விளையாட்டுக் கழகமும், கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வு 14.04.2017 வெள்ளிக்கிழமை யாழ். கந்தரோடையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் அதிதிகளாக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் பிரகாஸ், யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மனற்றத் தலைவர் காமராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டியோர்க்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில்; பெருமளவிலான இளைஞர், யுவதிகள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.