வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கழகத்தின் தலைவர் திரு பி.ரஞ்சித்குமார் தலைமையில் 16.04.2017 அன்று வெகுசிறப்பாக விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், PLOTE வட மாகாண சபை உறுப்பினர் DPLF நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான, திரு G.T.லிங்கநாதன்(விசு) அவர்களும்
சிறப்பு விருந்தினராக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா (PLOTE), DPLF உபதலலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் திரு சி.வையாபுரிநாதன், வஃபெரிய கோமரசன்குளம் ம.வி அதிபர் திரு சி.வரதராசா, வஃஆசிகுளம் அ.த.க.பாடசாலை அதிபர் திரு.கே.கணேசன், சிதம்பரபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்கள்.
இன்றைய நிகழ்வுகள் ஆசிகுளம் கிராம சேவகப்பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பொதுமக்களுக்கான நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில் சல்லி அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.
தொடர்ந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் சாள்ஸ் அணியினர் செவ்வானம் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கி கொண்டனர்.
இறுதி நிகழ்வாக பரிசளிப்பு நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றதுடன். அதிதிகளின் உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.