PRO01விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மத்தி, வன்னியர் வீதியைச் சேர்ந்த திருமதி கருணாகரன் சந்திரேஸ்வரியின் குடும்பத்தின் வாழ்வாதாரத் தொழிலாகிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 31,050.-  பெறுமதியில் மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றையும், அதற்குரிய உபகரணங்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ்கிளைத் தோழர்களான செல்வபாலன், ராஜேந்திரம், தீபன்; ஆகியோர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.மறைந்த கழகத் தோழர் கணபதிப்பிள்ளை கருணாகரன் (ரங்கநாதன்) அவர்களின் துணைவியாரான சந்திரேஸ்வரி அவர்கள் தமது விவசாயத் தொழிலை வளப் பற்றாக்குறை காரணமாக பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் முன்னெடுத்துவந்த நிலையில் சுவிஸ் கிளைத் தோழர்களால் 16.04.2017 ஞாயிற்றுக்கிழமை மேற்படி உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி உதவியினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் அவர்கள் வழங்கி வைக்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களான ம.நிஸ்கானந்தராஜா, ந.ராகவன், கா.கமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

PRO01

PRO04PRO03PRO05PRO06