வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு அறவழிப் போராட்டத்திற்கு இன்று சாதகமான பதில் கிட்டியுள்ளது. இதற்கமைய, மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் 36 நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் முள்ளிக்குளம் கடற்படைத் தளத்தில் இன்று நடைபெற்றது. Read more