sdசட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, மியர்மார் பிரஜைகள் 30 பேர் மற்றும் இரு இந்தியர்களுமே, கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.

சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த இவர்களை, பத்திரமாக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். கைதானோரில் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர். மேலும், அகதிகளாக சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜைகள் இந்தியாவுக்கு சென்றுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லுத்தினல் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார்.