sfd (2)நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராடி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 54ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக அறிவித்துள்ளனர். உழைக்கும் வர்க்கமாகிய தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தினத்தை கருப்பு தினமாக கொண்டாடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.