manoஇலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்றும் எனவே இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்று அரசாங்கத்தின் தலைமை கருதுமானால் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வடக்கே இராணுவம் பொதுமக்களின் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார் மனோ கணேசன்.

நாட்டின் புதிய அரசியல் சாசனம் இயற்றப்படுவது தொடர்பில், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு மத்திவாக்கில் அதற்கான வரைவு தயாராகிவிடும் எனும் நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-39825766