p1புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த இரு சகோதர உறவுகளான லதீஸ் லவீதா ஆகிய சகோதரர்கள் தங்களது பேரன் பேத்திகள் மற்றும் யுத்தத்தினால் தாய் தந்தையை இழந்தவர்கள் எல்லோரின் ஆத்ம சாந்தி வேண்டி

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 15 குடும்பங்களைத் தெரிவு செய்து குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பொதிகளை அன்பளிப்பாக வழங்கி தங்களது தர்ம காரியத்தை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அதன் தலைமை காரியாலயத்தில் வைத்து நாடாத்தியுள்ளார்கள். இன்று சித்திரா பௌர்ணமி தினத்தில் இத் தரும காரியத்தை முன்னேடுத்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சகோதர்களான லதீஸ் மற்றும் லவீதா ஆகிய உறவுகளுக்கு பயனாளிகள் குடும்பம் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் இவர்களுக்கு தமிழ் உணர்வையும் தரும சிந்தனையையும் ஊட்டி வளர்த்த இவர்களின் பெற்றோருக்கு இறைவன் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளுடன்; வாழ நாம் இறைவனை பிரார்த்திப்பதோடு இவர்களின் பேரன் பேத்தி ஆகியோரின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

p3 p4 p5p2