அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளதற்கு எதிராக எதிர்வரும் 24ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து அதிபர்களையும் கொழும்புக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.
2009ம் ஆண்டு அதிபர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 4200 பேருக்கு இதுவரை பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். அத்துடன் சுமார் மேலும் 3000 அதிபர்களுக்கு நியமனம் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.