12.05.2017 அன்று முல்லைத்தீவு மாவட்ட கால்நடை அபிவிருத்தி அலுவலகத்தில் அவ் மாவட்டத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் போசாக்குமட்டத்தை உயர்த்துவதற்காகவும் வருவாய் தரக்கூடிய கோழிவளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காகவும் முட்டை இடும் நல்லின கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.,
வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் கௌரவ க. சிவநேசன் அவர்களின் பரிந்துரைக்கமைய குறித்தொதுக்கப்பட்ட மாகாணசபையின் நிதியில் இருந்து 25 குடும்பங்களுக்கு மாவட்ட கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் இக் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.