police-station-jaffnaயாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக, கான்ஸ்டபிளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

பணிநிமித்தம் இருவருக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் சென்றுள்ளனர்.இதனையடுத்து, தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, பொலிஸ் பரிசோதகரை, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் தாக்கியுள்ளதாக தெரிகிறது.

பின்னர், விருந்தினர் விடுதியின் முகாமையாளர் இருவரையும் தடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளுக்கு எதிராக பொலிஸ் பரிசோதகர் முறைப்பாடு பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.