கடும் போக்கு பௌத்த அமைப்பு என கூறப்படும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோவை கைது செய்வதற்கு பல போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போலீஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, இனங்களுக்கிடையில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் உரையாற்றியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை கைது செய்வதற்கு சிறப்பு போலீஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more