Header image alt text

manoகடும் போக்கு பௌத்த அமைப்பு என கூறப்படும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோவை கைது செய்வதற்கு பல போலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போலீஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, இனங்களுக்கிடையில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் உரையாற்றியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை கைது செய்வதற்கு சிறப்பு போலீஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

londonமான்செஸ்டர் தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை தம்மிடம் பகிர்ந்த புலனாய்வுத் தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஊடகங்களில் கசியவிட்டதாக கருதும் பிரிட்டன் காவல்துறை இந்த புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக தெரியவந்திருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு தொடர்பான பிரிட்டன் காவல்துறையின் வெளியிடப்படாத புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் கோபமடைந்துள்ளனர். Read more