help03தெற்கில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர் உணவு மற்றும் இதர பொருட்கள் இன்று தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தெற்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் கடந்த சில நாட்களாக உதவிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.

பல பொது அமைப்புக்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு இன்று நண்பகல் தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதேவேளை, யாழ்.மாவட்ட செயலகத்தினால் யாழ்.வணிகர் சங்கத்துடன் இணைந்து சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களும் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களும் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக யாழ்.மாவட்டத்தில் சேரிக்கப்பட்ட பொருட்கள் சுமார் 10 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் சேரிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் இன்று தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

help01 help02 help03