uk01 பிரித்தானியாவில் லண்டன் நகரில் ட்ரவர் பிறிட்ஜ் இல் நேற்று இரவு வாகனத்தல் பொதுமக்கள் மீது மோதி மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடந்திருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று வேகமாக வந்து அங்கிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. அச்சம்பவத்தில் கீழே விழுந்தவர்கள் சிலர் மீது வாகனம் ஏறியும் சென்றதாக கூறப்படுகிறது.uk02இத் தாக்குதலின் போது, 20பேர் வரை படுகாயமடைந்திருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் அவசர சிகிச்சை வாகனங்கள் பல விரைந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதலை அடுத்து போக்கு வரத்துக்கள் தடுக்கப்பட்டு அந்த பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு பொலிசாரும் பயங்கரவாதத்தடுப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மான்செஸ்டர் பகுதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 22-பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.