thipaதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்தை மீட்கவே அங்கு வந்திருப்பதாக இல்லத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.அப்பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாலும், அப்பகுதியில் பதட்டம் சூழ்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் தங்கி வந்தனர்.

இந்த சூழலில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான தனக்கும், தனது சகோதரருக்கும்தான் போயஸ் தோட்ட இல்லம் சொந்தம் என ஜெ.தீபா தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறி வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜெ.தீபா அப்பகுதிக்கு சென்றது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியது