D.sithadthan MPவடமாகாண சபையின் தற்போதைய நிலை அங்கத்தவர்கள் சுயாதீனமாக முடிவெடுங்கள்

அங்கத்தவர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என நாம் விட்டுள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.வடமாகாண சபையின் தற்போதைய நிலை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

இந்த விவகாரத்தை நீடிக்க விடுவது ஆரோக்கியமானது அல்ல.

இந்தப்பிரச்சினையை ஏதோ ஒரு வகையில் பேசித் தீர்த்து கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்காது பாதுகாக்க வேண்டும். அது தான் எமது நிலைப்பாடு.

அதேநேரத்தில் மாகாண சபை உறுப்பினர்களை சுயாதீனமாக முடிவுகளை எடுக்குமாறு நாம் விட்டுள்ளோம்.

எனினும் எமது கட்சி உறுப்பினர்கள் எவரும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடவில்லை. எமது கட்சி தற்போதைய இந்த நிலை தொடர்பில் இன்னும் கூடி ஆராயவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.