Untitledவடமாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமாகாணத்தின் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரனேசன் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா ஆகியோர் பதவிகளை இராஜனாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிகளை தலமையமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.இந்த பதவியேற்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வட மாகாண ஆளுநர் ரெஜினொல் குரே முன்னிலையில் இடம்பெற்றது.

ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசன் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டுமென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைந்திருந்தது.

அதன்படி அந்த இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து வடமாகாண சி.வி. விக்னேஸ்வரன் அந´த அமைச்சுக்களை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.