UGCபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதிவரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, 2016/2017ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்களை பதிவு செய்வதற்கான இறுதி திகதியாக, ஜூன் 30 அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை பல்கலைக்கழகங்களில் பதிவு செய்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் அறிந்துகொள்வதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களான, 0112695302, 0112695301 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.