postஅஞ்சல் சேவை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நேற்றைய தினத்துடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக அஞ்சல் சேவை ஊழியர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்களாக அஞ்சல் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, அஞ்சல் நிலையங்களில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.