Posted by plotenewseditor on 28 June 2017
Posted in செய்திகள்
சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்களும் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்கள் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் நாளைய தினம் வடமாகாண ஆளுனரை சந்திக்க உள்ளோம் அவர் எமக்கு சுமூகமான பதிலை அளிக்காவிட்டால் எமது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் அவரை தொடரும் எனத் தெரிவித்தனர். அத்துடன் தாம் 1992, 1997 களில் இருந்து பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாக பணிபுரிவதாகவும் தமக்கான நியமனங்களை சம்பந்தப் பட்டவர்கள் பெற்றுத் தாருங்கள் எனக் கோரிக்கையும் விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.