wrerereகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகமும், கிளிநொச்சி சமூர்த்தி அபிவிருத்தி வங்கியும் இணைந்து சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். நேற்றுக் காலை கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கரைச்சி பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.

அங்கு மாதிரி சிகரட் மற்றும் மது போத்தல் என்பன எரிக்கப்பட்டு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பாவனைக்கு எதிரான வாசங்களும் எழுதப்பட்டிருந்தது. இதில் கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், கிளிநொச்சி வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவிப் பணிப்பாளர், மதகுருமார்கள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.