ewrereஇலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் காலமானார். 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நிரூபம் சென் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றியிருந்தார். 1969 ஆம் ஆண்டு முதல் இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து பணியாற்றிய அவர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார்.

இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றுவதற்கு முன்னதாக பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலும் இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றியிருந்தார். நிரூபம் சென் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய வதிவிட பிரதிநிதி என்பதுடன் ஐக்கிய நாடுகளின் வருடாந்த அமர்வில் அவைத் தலைவரின் விசேட சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.