retrrகொழும்பு வெள்ளவத்தைக் கடற்பரப்பில் மீனவ படகொன்று கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்த படகில் 4 அல்லது 5 பேர் அளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த படகில் சென்ற இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.