sfdமீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை மீனவத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு படகுகள், கப்பல் ஒன்றில் மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சிக்கிய ஒரு படகில் இருந்த மீனவர்களை, அருகிலிருந்த மற்றுமொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். எனினும், கப்பலுடன் மோதிய மற்றைய படகில் இருந்த மூவரில் ஒருவர் காப்பாற்றப்பட்ட நிலையில், இருவர் காணாமல் போயிருந்தனர். அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 14பேருடன் பயணித்த கப்பல் நேற்றுமாலை விபத்திற்குள்ளாகியதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார். பாகிக் 2 என்ற கப்பலே நேற்றுமாலை விபத்திற்குள்ளாகியது. மேலும் கப்பலில் பயணித்த ஏனையோர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக கடற்படைப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.