missingயாழில் தனது மகனைக் காணவில்லை என, தாயார் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற அவர், மாலை வேலை முடித்துவிட்டு வீடு செல்வதாக கூறியுள்ளார். எனினும், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை எனவும், பல இடங்களில் தேடிய போதும் தனது மகன் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த இளைஞரை தேடி வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.