maithriஅரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டதும், முறையாக மகாநாயக்கர்களிடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான யோசனைகளையும் கருத்துக்களையும் மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மகா நாயக்க தேரர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக எந்தவித இறுதி வரைவுகளும் செய்யப்படவில்லை என்றும், அரசாங்கம் இதுபோன்ற வரைவு ஒன்றை செய்யுமாயின் நாட்டின் எதிர்காலம் மற்றும் ஸ்திரத்தன்மை சம்பந்தமாக ஆழமாக சிந்தித்தே செயற்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.