Untitledயாழ். இணுவில் அண்ணா சனசமூக நிலையத்தின் 65 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் அண்ணா முன்பள்ளியின் விளையாட்டு விழா என்பன வெகு விமரிசையாக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றன. ஆண்டு விழாவை முன்னிட்டுக்   காலை மருதனார்மடம் சந்தியிலிருந்து ஐம்பது மைல் தூரமுடைய சைக்கிளோட்டப்போட்டி ஆரம்பமானது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.அதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் சனசமூக மைதானத்தில் அண்ணா முன்பள்ளி விளையாட்டு விழா இடம்பெற்றது. இந்த விழாவில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும். வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளதுடன், வலி.தெற்குப் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ; மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்த நிகழ்வில் சிறார்களின் மெய்வன்மை நிகழ்ச்சிகள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு சனசமூக நிலையத்தினரர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்தனர். மேலும் இந்த நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள்;,  பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

anna01 anna02 anna03 Untitledanna04