28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணக் கல்லுரியின் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஜங்கரன், தலைமை ஏற்று நடத்தினார். பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் யாழ்ப்பாண கல்லுரி தொழில்நுட்ப நிலையத்தின் இயக்குனர் திரு போல், சங்கானைக் கல்விக் கோட்டப் பணிப்பாளர், புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு. சி.ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், பிரதேச இணைப்பாளருமாகிய திரு. அ.கௌதமன் மற்றும் கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.