
புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், இணைப்பாளருமாகிய அ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பின் பா.கஜதீபன் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சங்கானைக் கல்விக் கோட்டப் பணிப்பாளர், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி ஜங்கரன், யாழ்ப்பாண கல்லுரி தொழில்நுட்ப நிலையத்தின் இயக்குனர் திரு.போல், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நோர்வே நாட்டு பிரதிநிதி திரு சி.ராஜன் அவர்களும், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.