IMG_4412புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டுவரும் வீரமக்கள் தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வு 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் வவுனியா கோவில்குளம் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ச்சியாக மௌன அஞ்சலி, நினைவுச்சுடர் ஏற்றுதல், மலரஞ்சலி என்பன இடம்பெற்றன.

புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான தோழர் க. சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் திரு சு.சதானந்தன், ரெலோ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ நோகராதலிங்கம், தமிழரசுக் கட்சியின் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், ரெலோ அமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன், வடக்கு மாகாண சபையின் புளொட் உறுப்பினர்கள் திரு க.சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவசோதி, புளொட் அமைப்பின் கனடா கிளையின் பொருளாளர் தோழர் சார்ள்ஸ், புளொட் அமைப்பின் நோர்வே நாட்டுப் பிரதிநிதி தோழர் ராஜன் மற்றும் Read more