sdfdsfdநீதிபதி இளஞ்செழியனுக்கு 18 வருட மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்றுமாலை நடத்தப்பட்ட தாக்குதலின்போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன் ஹேமச்சந்திர என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தாக்குதலின்போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர்மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர். உடனடியாக அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தனர். இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி ஒரு மெய்ப்பாதுகாவலர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். வயிற்றில் பலத்த காயமடைந்திருந்த மெய்ப்பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.