முல்லைத்தீவு குரவில் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புளொட் அமைப்பின் கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் அவர்களால், 2017ஆம் ஆண்டிற்கான குறித்தொதுக்கப்பட்ட மூலதன நன்கொடைகள் நிதிப் பங்களிப்பினூடாக ஒலிபெருக்கி கருவி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20.07.2017ல் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், வன்னி மேம்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.