Header image alt text

vnaயாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த நீதி கோரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றுகாலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. Read more

ertrtreநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் (வயது 39) என்பவரே யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி நல்லூர் ஆலய தெற்கு கோபுர வாசல் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் சென்றபோது, பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியை எடுத்து சுட்டபோது, பொலிஸ் கான்ஸ்டபிள் சரத் பிரேமசந்திர உயிரிழந்தார். மற்றொரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். Read more

werweமாலைத்தீவு பாராளுமன்றம் அந்நாட்டு இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாலைத்தீவு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதை தடுக்கும் வகையில் மாலைத்தீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கயூமின் பணிப்புரைக்கு அமைவாக இராணுவத்தினரால் பாராளுமன்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. Read more