Header image alt text

erநல்லூரில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு அற்றுசுருத்தல் ஏற்படும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து கிளிநொச்சியிலும், மலையகத்திலும் இன்று கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட்டோரின் உறவினர்கள் ஏந்தியிருந்தனர். குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக நீதியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. Read more

shotதிருட்டு வழக்கில் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ். நீதிமன்றில் இருந்து தப்பியோடிய சம்பவத்தினால் நீதிமன்றில் பரப்பு நிலவியுள்ளது. யாழ். பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்றில் உள்ள சிறைக்கூடத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக மன்றின் அருகாமையில் உள்ள இருக்கையில் இருத்தி வைக்கப்பட்டபோது, அவர் சிறைச்சாலை உத்தியோகத்தருக்குத் தெரியாமல் நீதிமன்றில் நின்ற பொதுமக்கள் போன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். Read more

werwerewபல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில், இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

sdfgfபெற்றோலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோலியத்துறை ஊழியர்கள் சேவைக்குத் திரும்பியுள்ளனர்.

இதனால் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. அத்தியாவசிய சேவை என்பதால் தாம் மீண்டும் சேவைக்குத் திரும்ப இணங்கியதாக பெற்றோலிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக எண்ணெய் தாங்கியை சீனாவிற்கு வழங்கல், சீனக்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கியை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கல் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.