gfgfமட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம், இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலையமே, புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளி பொலிஸ் நிலையம் இருந்த இடத்திலேயே, புதிய பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.