Header image alt text

putinரஷ்யாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள 755 தூதரக அதிகாரிகளையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

trtrrவீட்டுத்திட்டம் வழங்கக் கோரி, சாந்தசோலை கிராம மக்கள், வவுனியா மாவட்ட செயலகத்தை, இன்றுகாலை 11 மணிக்கு, முற்றுகையிட்டனர்.

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனவும் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் தெரிவித்து, வவுனியா மாவட்ட செயலாளரிடம், மகஜர் ஒன்றும் கையளித்தனர். Read more

IMG_5362தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட 2107 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகளின் உதைபந்தாட்ட தேசிய மட்ட போட்டிகள் 27.07.2017 முதல் பதுளை மாவட்டத்தில் நடைபெற்றது. இவ் ஆண்டுக்கான தேசிய உதைபந்தாட்ட போட்டிக்கு வவுனியாவில் இருந்து வவுனியா பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்தில் தனது திறமையினை செவ்வனே வெளிப்படுத்திய 786 இளைஞர் கழகம் தேசிய மட்டத்தில் பல மாவட்ட அணிகளை வீழ்த்தி இவ் ஆண்டு மூன்றாம் இடத்தினை தனதாக்கியுள்ளது.

இவர்களுக்கான மாபெரும் வரவேற்பு நிகழ்வு கிராம மக்களின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.கே.மஸ்தான், முன்னாள் நகர சபை உறுப்பினர் பாரி, கிராம சேவகர் நசார், சமூக ஆர்வலர் ஆரிப், இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், Read more

human right commission sri lankaஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, கடந்தாண்டின் கடைசிக் காற்பகுதியில், 1,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அவ்வாணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின்படி, இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்படி, 680 முறைப்பாடுகள், ஆணைக்குழுவின் எல்லைக்குள் காணப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 132 முறைப்பாடுகள், முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையின்படி, அதிகளவிலான முறைப்பாடுகளாக கண்டி மாவட்டத்திலிருந்து 244 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. Read more