human right commission sri lankaஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, கடந்தாண்டின் கடைசிக் காற்பகுதியில், 1,223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அவ்வாணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையின்படி, இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்படி, 680 முறைப்பாடுகள், ஆணைக்குழுவின் எல்லைக்குள் காணப்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 132 முறைப்பாடுகள், முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையின்படி, அதிகளவிலான முறைப்பாடுகளாக கண்டி மாவட்டத்திலிருந்து 244 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மாத்தறையிலிருந்து 170, அநுராதபுரத்திலிருந்து 141, மட்டக்களப்பிலிருந்து 80, கல்முனையிலிருந்து 78, வவுனியாவிலிருந்து 79, யாழ்ப்பாணத்திலிருந்து 73, அம்பாறையிலிருந்து 56, பதுளையிலிருந்து 55, திருகோணமலையிலிருந்து 45 முறைப்பாடுகள் என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.